Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்ச விவகாரம்: 3 தமிழக கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சிபிஐ சோதனை

Subscribe to Oneindia Tamil

CBI
சென்னை: ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் மேல் படிப்பு தொடங்குவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் 3 பல் மருத்துவ கல்லூரி உள்பட நாடுமுழுவதும் 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அருகே மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் முதுநிலை டெண்டல் பாடப்பிரிவை துவங்க கடந்த 2012ல் இந்திய பல் மருத்துவ கவுன்சி லுக்கு கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்தது. இதையடுத்து, அந்த பல் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க ரூ.1 கோடி தர வேண்டும் என்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகேசன் கேட்டுள்ளார். இதற்கு கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த ராமபத்திரன் உடன்பட்டுள்ளார்.

ஜனவரி 7ம் தேதி ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து ராமபத்திரன் ரூ.25 லட்சத்தை முருகேசனிடம் கொடுக்கும்போது சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த கருணாநிதி, ஆற்காடு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ காவலில் உள்ள டாக்டர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாடு பல் மருத்துவக் கவுன்சில் தலைவர் மற்றும் அகில இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் மற்றொரு உறுப்பினருமான டாக்டர் குணசீலனுக்கும் தொடர்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து, குணசீலன் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் முக்கிய ஆவணங்களையும் ரூ.75 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர். குணசீலனிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து டாக்டர் குணசீலன், டாக்டர் முருகேசன் ஆகியோரின் அகில இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவிகளை தமிழக அரசு பறித்தது.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பல் மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திங்கட்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அடையாறு கஸ்தூரிபா நகர், 2வது தெரு பக்தவச்சலம் நகர் அண்ணா அவென்யூவில் உள்ள அவரது வீட்டில் 6 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவினர் சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் இன்று தமிழகத்தில் 3 பல் மருத்துவ கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+