22 நாட்கள் கழித்து கொடநாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பும் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டன்று கொடநாடு சென்றார். அங்கிருந்து கொண்டே அரசு பணிகளை கவனித்து வருகிறார். முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று கோத்தகிரியில் அவரது சிலையை திறந்து வைத்தார். மேலும் தேனியில் பென்னி குவிக் சிலை திறப்பு விழாவிலும், சிறப்பு பொங்கல் பரிசு தொடக்க விழாவிலும் பங்கேற்றார்.
22 நாட்களாக கொடநாட்டில் இருக்கும் அவர் இன்று சென்னை திரும்புகிறார்.
கொடநாட்டில் தங்கியிருந்த ஜெயலலிதா, இன்று காலை கொடநாட்டில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார்.
அவரை, நீலகிரி மாவட்டச் செயலர் அர்ஜுனன், அமைப்புச் செயலர் ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ புத்தி சந்திரன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
அவர், கொடநாடு பங்களாவில் இருந்து கிளம்பி வரும் வழியில், கரகாட்டம், காவடி ஆட்டம், ஜெண்டை மேளம், பாரம்பரிய பரத நடனம், படுகர் நடனத்துடன் உற்சாக வழியனுப்பு விழா நடைபெற்றது.
கோவை விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து திரும்பியதும் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. அதிலும் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் பறிக்கப்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications