22 நாட்கள் கழித்து கொடநாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பும் ஜெயலலிதா

முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டன்று கொடநாடு சென்றார். அங்கிருந்து கொண்டே அரசு பணிகளை கவனித்து வருகிறார். முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று கோத்தகிரியில் அவரது சிலையை திறந்து வைத்தார். மேலும் தேனியில் பென்னி குவிக் சிலை திறப்பு விழாவிலும், சிறப்பு பொங்கல் பரிசு தொடக்க விழாவிலும் பங்கேற்றார்.
22 நாட்களாக கொடநாட்டில் இருக்கும் அவர் இன்று சென்னை திரும்புகிறார்.
கொடநாட்டில் தங்கியிருந்த ஜெயலலிதா, இன்று காலை கொடநாட்டில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார்.
அவரை, நீலகிரி மாவட்டச் செயலர் அர்ஜுனன், அமைப்புச் செயலர் ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ புத்தி சந்திரன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
அவர், கொடநாடு பங்களாவில் இருந்து கிளம்பி வரும் வழியில், கரகாட்டம், காவடி ஆட்டம், ஜெண்டை மேளம், பாரம்பரிய பரத நடனம், படுகர் நடனத்துடன் உற்சாக வழியனுப்பு விழா நடைபெற்றது.
கோவை விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து திரும்பியதும் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. அதிலும் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் பறிக்கப்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications