சி.ஏ. தேர்வில் முதலிடம் பிடித்த பிரேமாவுக்கு முதலில் கருணாநிதி ரூ.1 லட்சம், அடுத்து வாசன் ரூ. 5 லட்சம்

இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மும்பை, மலாட் எஸ்.பி. கான் சால் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் பெருமாள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள பெரிய கொல்லியூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பிரேமா, சமீபத்தில் நடந்த சி.ஏ. தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனையை பாராட்டி திமுக அறக்கட்டளை சார்பில் மாணவி பிரேமாவுக்கு ரூ.1 லட்சம் தொகை வழங்கப்படுகிறது என தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பிரேமாவுக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமாரிடம் போனில் பேசிய வாசன் பிரேமாவை வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications