இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு

பெங்களூரைச் சேர்ந்த சவுபிக் பால் என்ற அந்த மாணவர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருள் வடிவமைப்பு துறையில் பயின்று வந்தார். கால்பந்து மைதானத்தில் தின்பண்டங்கள் விற்பனை செய்வதை பகுதி நேர வேலையாகவும் சவுபிக் பால் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் புத்தாண்டு தினத்தன்று திடீரென்று காணாமல் போனார்.
காணமல் போன சவுபிக் பாலை கண்டுபிடிப்பதற்காக, ப்ரீமியர் லீக் போட்டிகளின்போது, டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ருல்ட் டிராஃபோர்டு நகரில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணியின் மைதானம் அருகே கால்வாயில் அவரது உடல் நேற்று கைப்பற்றப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது இறப்பு குறித்து சந்தேகத்துக்கிடமான தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். விசாரணையில் உதவுவதற்காக சவுபிக் பாலின் தந்தை சாந்தனு, பெங்களூரில் இருந்து இங்கிலந்துக்கு விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications