சீனாவில் 2000 குழந்தைகளை பெற்றோரிடம் இணைத்த டி.என்.ஏ டெஸ்ட்:

சீனாவில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. பணத்திற்காக கடத்திச் செல்லப்பட்டு, நிற்கதியாக விடப்படும் சிறுவர்கள் அங்கு அதிகம். அதேபோல் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, மனம்போன போக்கில் சுற்றித் திரியும் சிறுவர்களும் அங்கு அதிகம்.
இதற்காக கடந்த 2009-ஏப்ரல் மாதம் முதல் சீனாவில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்கள் மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கும் பெற்றோர்களின் மரபணுக்களை போலீசார் சேகரித்துக் கொள்கின்றனர்.
அதேபோல் தெருவில் சுற்றித் திரியும் சிறுவர்களை பிடித்து வைப்பதுடன் அவர்களின் மரபணுக்களையும் சோதித்து சேகரித்து வைத்துக் கொள்கிறது சீன அரசு. இந்த இருவரின் மரபணுக்களையும் பொருத்தி பார்த்து யாருடைய மரபணு பெற்றோருடன் பொருந்துகிறதோ அந்த சிறுவர்கள், குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்படுகிறார்கள்.
இந்த புதிய திட்டத்தின்படி இதுவரை 2,348 சிறுவர்கள், தங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 521 சிறுவர்கள் இவ்வகையில் தங்களின் குடும்பத்தாருடன் இணைந்துள்ளனர். சிறுவர்களின் நிறம், உருவம் போன்றவை பல ஆண்டு கால பிரிவில் மாறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் மரபணு என்பது என்றென்றுமே மாறாது எனவேதான் இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர்களுடன் இணைந்துள்ளனர் சிறுவர்கள்.
இதுகுறித்து சீன அரசின் குழந்தை கடத்தல் தடுப்பு அமைச்சகத்தின் இயக்குனர் சென் ஷிகு, "இந்த மரபணு மாதிரிகளின் மூலம், நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்குள் உடனடியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. இதன் மூலம், பல ஆண்டுகளாக பிரிந்திருக்கும் பெற்றோர்களுடன் பிள்ளைகள் சேர்ந்து வாழ்கின்றனர் என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications