ஷிண்டேயின் 'இந்து தீவிரவாத' பேச்சு- நாடு முழுவதும் பாஜக கண்டன போராட்டம்!
டெல்லி: 'இந்து தீவிரவாத' பயிற்சி கொடுக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருந்த உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவைக் கண்டித்து பாஜக இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வில் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி முகாம்களில் 'இந்து தீவிரவாத' பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்று சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஷிண்டேயின் பேச்சைக் கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஷிண்டேயின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியின் தலைவர் ராம கோபாலன், காங்கிரஸ் கட்சியின் கொடியிலேயே காவி நிறம் இருக்கிறது. யாரையோ திருப்திபடுத்துவதற்காக அறிவுகெட்டத்தனமான ஷிண்டே பேசக் கூடாது என்றார்












Click it and Unblock the Notifications