ரயில் சாப்பாடு பிடிக்கலையா? புகார் கொடுக்க போன் நம்பர் இருக்கு
டெல்லி: ரயிலில் வழங்கப்படும் உணவு குறித்து ஏதாவது புகார் செய்ய வேண்டும் என்றால் 1800111321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். ரயில்வே துறை அமைத்துள்ள இந்த புகார் சேவை வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி முதல் இயங்கும்.
இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறுகையில்,
ரயிலில் வழங்கப்படும் உணவு குறித்து புகார் செய்ய விரும்புவோர் 1800111321 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் உணவுக்கு அதிக பணம் வசூலிப்பது, குறைவான அளவு அல்லது தரமின்மை உள்ளிட்ட எது குறித்து வேண்டுமானாலும் புகார் செய்யலாம். இந்த எண் ஜனவரி 18ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. வரும் 26ம் தேதி வரை புகார்கள் பெறப்படும்.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள உணவு வழங்கும் கான்டிராக்டர்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்க இப்படி ஒரு எண் இருக்கிறது என்பதை பயணிகளுக்கு தெரியப்படுத்த இந்த எண்ணை ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் ஒட்டிவைக்கப்படும்.
ரயிலில் வழங்கப்படும் தயிரின் தரம் சரியில்லை. அதனால் இனிமேல் நல்ல பெயர் எடுத்துள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தயிரை மட்டுமே வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் மெனுவை மேம்படுத்த உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications