ரெய்டா நடத்துறீங்க... ஆட்சி மாறட்டும்.. சோனியா, சிதம்பரம் காப்பாத்த வரமாட்டங்க..: கொந்தளித்த கத்காரி
Subscribe to Oneindia Tamil

பாஜகவின் தலைவராக இருந்த கத்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அவர் தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. ராஜ்நாத்சிங் மீண்டும் தலைவரானார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து நாக்பூர் திரும்பிய கத்காரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கத்காரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த அதிகாரிகள் அனைவரும் எங்கே போவார்கள்? ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அந்த அதிகாரிகளை காப்பாற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியோ அல்லது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமோ உதவிக்கு வரமாட்டார்கள் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
கத்காரியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications