பாமக – அதிமுக மோதல்: கடலூரில் பதற்றம்… போலீஸ் குவிப்பு
கடலூர்: கடலூரில் பாமக - அதிமுக தொழிற்சங்க பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கடலூரில் நுழைய தடை விதித்ததை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் பாமக தொண்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பா.ம.க தொண்டர்களுக்கும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ம.க.,வினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
பா.ம.க.,வினர் போலீஸ் மோதலில், அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அதிமுக தொழிற்சங்க பேரவையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தாக்குதலை தொடர்ந்து பா.ம.க.,வினர் மீது அதிமுக தொழிற்சங்க பேரவையினரும் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை நிறுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் கடலூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications