லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரி பெண் நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: எம்.டி.எஸ். படிப்புக்கு அங்கீகாரம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீலேகாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ். படிப்புக்கு அங்கீகாரம் பெற இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினரான டாக்டர் முருகேசனுக்கு அக்கல்லூரியைச் சேர்ந்த சிலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க முயன்றபோது முருகேசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. பழனி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகா மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் ஸ்ரீலேகாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
ஸ்ரீலேகா வரும் 28, 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிபிஐ விசாரணைக்கு வர வேண்டும். அதன் பிறகு ஒரு வார காலத்திற்கு சிபிஐ முன்பு மாலை 5.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பின்னர் எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications