ஜெயலலிதா பிரதமராவார்… நாஞ்சில் சம்பத்
விழுப்புரம்: மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் நிலையில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடுக்கும் அதிகாரத்திற்கு அதாவது பிரதமராக வருவார் என்று அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கியும், தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்யும், தி.மு.க. தலைவர் கருணாநியின் செயல்பட்டை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நாஞ்சில்சம்பத் பேசியதாவது:
தமிழகத்தில், 3 நாட்கள் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை அழைத்து தனித்தனியாக மாநாடு நடத்தி, தமிழகத்துக்கு தேவையான 343 திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்தார். தேசிய திட்டக்குழு கூட்டத்தில் இது குறித்து பேசச் சென்றார். அவரை பேசவிடாமல், மணியடித்து நிறுத்திவிட்டதால் முதல்வர் ஜெயலலிதா கூட்டத்தைப் புறக்கணித்தார். இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. விரைவில் மணி அடிக்கும் அதிகாரம் நம்மிடம் வரும்.
மின்சாரம், நிதி, தண்ணீர் என தமிழக தேவைகளுக்கு கேட்டுப் பெறும் நிலையில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடுக்கும் நிலைக்கு வருவார். அதாவது இந்திய பிரதமராகும் நிலைக்கு ஜெயலலிதா உயர்வார் என்று சூசகமாக தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications