லோக்சபா தேர்தலைவிட சட்டசபை தேர்தலே முக்கியம்- விஜயகாந்த்தின் புது கணக்கு!

தேமுதிகவின் 8-வது பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னையில் நடைபெற்றது. லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் அணியில் தேமுதிக இணையும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. தேமுதிகவின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த் தெரிவித்து வந்த கருத்துகளும் இந்த யூகத்தை உறுதிப்படுத்தியே வந்தன.
ஆனால் நேற்றைய தேமுதிக பொதுக்குழுவில், 2014- லோக்சபா தேர்தலுக்கு ஒரு கூட்டணி அமைக்கப் போய் அது சரிவராமல் போனால் 2016 சட்டசபை தேர்தலிலும் பாதித்துவிடுமே என்ற கருத்தை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்வைத்திருக்கின்றனர்.
மேலும் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக- அதிமுகவுக்கு மாற்றான ஒரு வலுவான கட்சியாக நிலைகொள்வதற்கான வியூகத்தை வகுத்துச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்று பலரும் பொதுக்குழுவில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒரு எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் தேமுதிக, வரும் லோக்சபா தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டிய அவசிய்ம் இருக்கிறது.. அப்போதுதான் கட்சிக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
இன்னும் சிலர் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமலே சட்டசபை தேர்தலில் மட்டும் போட்டியிட்டால் என்ன என்ற கருத்தையும் முன்வைத்திருக்கின்றனர்.
கூட்டணி குறித்து கூட்டத்தில் விஜய்காந்த் பேசுகையில், கூட்டணி பற்றி எனக்கு முடிவு கொடுத்திருக்கிறீர்கள்.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. முதலில் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஊர்தோறும் கட்சிக் கொடிகளை ஏற்றுங்கள், 2014ம் ஆண்டு தேர்தலுக்காக (நாடாளுமன்றத் தேர்தல்) 2016ம் ஆண்டு தேர்தலை (சட்டமன்றத் தேர்தல்) நாம் பலி கொடுக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.
பொதுவாக லோக்சபா தேர்தலில் 'காசு செலவழித்து' காயத்தை வாங்கிக் கொண்டு சட்டசபை தேர்தலை சந்தித்து 'பெருங்காயம்' ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கருத்தாக இருக்கிறது!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications