செங்கோட்டை அருகே வேன் மீது லாரி மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியுருப்பில் வேன் மீது லாரி மோதியதில் 3பேர் பலியாகினர்.
விருதுநகர் அருகே ராஜபாளையம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை செங்கோட்டையிலிருந்து வேன் மூலமாக கேரளாவுக்கு வர்த்தகம் செய்ய சென்றனர். அவர்கள் பயணித்த வேன் மீது லாரி ஒன்று கட்டளை குடியிருப்பு அருகே மோதியது. இதனால் வேனில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வேன்மீது மோதிய லாரியை போலீசார் கைப்பற்றி டிரைவரை தேடி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications