மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகம்- - சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழக்குகள் போகும்: மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
விருத்தாசலம்: திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்படும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருத்தாசலத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நிகழ்வில் அவர் பேசுகையில், தமிழ்மொழிக்காக, செம்மொழிக்காக 14 வயதில் இருந்து 90 வயது வரையில் இன்றுவரை தி.மு.க. தலைவர் கலைஞர் பாடுபட்டு வருகிறார். சென்னையில் செம்மொழி பூங்காவை உருவாக்கினோம். ஆனால் ஆட்சியாளர்கள் இதனை பராமரிக்கவில்லை. திருவள்ளுவர் சிலை கூட பராமரிக்கப்படவில்லை.

2 மணி நேர மின்வெட்டுக்கே திமுகவுக்கு தோல்வி கிடைத்தது எனில் 20 மணிநேர மின்வெட்டுக்கு மக்கள் என்ன தண்டனை கொடுப்பார்கள்? 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் மின்வெட்டு நீக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களது ஆட்சியில் மின்சாரம்தான் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் போடப்படும். கூடிய விரைவில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. அதற்குள்ளாகவே தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வராதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+