திடீர் போர் ஒத்திகை நடத்திய பாகிஸ்தான் விமானப் படை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் விமானப் படையும் தரைப்படையும் இணைந்து ஒருங்கிணைந்த போர் ஒத்திகையை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இருநாடுகளிடையே தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் ஜெட் ரக போர் விமானங்கள், தரைப் படையுடன் இணைந்து போர் ஒத்திகையை நடத்தின. பாகிஸ்தான் விமானப் படை தளபதி தார்பட், படைப்பிரிவுகளின் தயார் நிலையை மதிப்பீடு செய்தார்.மேலும் எப்.16 ரக ஜெட் போர் விமானத்தில் அவரும் பறந்து ஒத்திகையில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தமது நாட்டின் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications