சட்டீஸ்கரில் 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த பியூன் கைது
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 17 வயது மாணவியை 20 வயது பியூன் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகோன் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் அந்த சிறுமி படித்து வருகிறாள்.
கேஷ்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அராண்டி கிராமத்தில், அந்தச் சிறுமியின் வீடு உள்ளது. ஞாயிறுக்குகிழமை பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது அங்கு டிகேஸ்வர் மாண்டவி என்பவன் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டான்.
அந்தச் சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் மாண்டவி கைது செய்யப்பட்டான். அவன் பள்ளி ஒன்றில் பியூனாக வேலை பார்த்து வருகிறான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications