காதல் திருமணம் பற்றி என்னுடன் மீடியாவில் பகிரங்கமாக விவாதிக்க ராமதாஸ் தயாரா? தா. பாண்டியன் சவால்
சேலம்: காதல் திருமணங்கள் மற்றும் சாதி அமைப்புகள் பற்றியும் தன்னுடன் மீடியாவில் பகிரங்கமாக விவாதிக்க தயாரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு சிபிஐ மாநில செயலாளர் தா. பாண்டியன் சவால் விட்டுள்ளார்.
சேலத்தில் சமூக நல்லிணக்க மாநில மாநாடு நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவில் பிறக்கும் எவனுக்கும் சாதி இல்லாமல் இல்லை. சமூகத்தில் ஆணிவேராக பரவியுள்ள சாதிய சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். அவ்வாறு வந்தால் தான் தர்மபுரி சம்பவம் போன்று இனி நடக்காமல் இருக்கும். சமூகத்தில் சாதி என்ற வாலு வெட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு வெட்டப்பட்ட வாலை ஒரு மருத்துவர் மீண்டும் ஒட்ட வைக்க முயற்சி செய்து வருகிறார் என்றார். (அவர் மருத்துவர் என்று குறிப்பிட்டது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை தான்). இன்று காதல் ஒரு நாடகம் என்று எல்லாம் அவர் பேசி வருகிறார். சாதி அமைப்புகள், காதல் திருமணங்கள் பற்றியும் மருத்துவர் என்னுடன் மீடியாவில் பகிரங்கமாக விவாதிக்க தயாராக உள்ளாரா? என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications