இந்தியாவுக்குள் ஊடுருவிய முஷாரப்புக்கு முன்னாள் தளபதி வி.கே.சிங் பாராட்டு! ராணுவம் மீது புகார்!!

கார்கில் போருக்கு முன்பாக இந்தியாவுக்குள் பர்வேஸ் முஷாரப் ஊடுருவினார் என்று பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வி.கே.சிங், இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
ஒரு அயல்நாட்டு ராணுவ தளபதியாக இருந்து மற்றொரு நாட்டுக்குள் 11 கிலோ மீட்டர் தொலைவு ஊடுருவி ஒருநாள் இரவு தங்கியிருந்த முஷாரப்பின் செயல் துணிச்சலானது... பாராட்டுக்குரியது. இப்படி ஊடுருவினால் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் அவர் தைரியமாக ஊடுருவியிருக்கிறார்.
இரண்டாவதாக நமது ராணுவம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற உண்மையும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். எப்படி அவர் ஊடுருவ அனுமதிக்கப்பட்டார்? அப்படியானால் நமது தரப்பில் இருந்த தவறுகள் என்ன? அவற்றை சரிசெய்தாக வேண்டும் என்றார்.
இந்திய ராணுவ தளபதியாக 2010-12 காலத்தில் தலைமை தளபதியாக இருந்தவர் வி.கே.சிங் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications