இந்தியாவுக்குள் ஊடுருவிய முஷாரப்புக்கு முன்னாள் தளபதி வி.கே.சிங் பாராட்டு! ராணுவம் மீது புகார்!!

Subscribe to Oneindia Tamil

VK Singh
டெல்லி: கார்கில் போருக்கு முன்பாக இந்தியாவுக்குள் 11 கிலோ மீட்டர் தொலைவு ஊடுருவி ஒருநாள் இரவு முழுவதும் தங்கியிருந்த பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்புக்கு இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் அலட்சியம் குறித்தும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

கார்கில் போருக்கு முன்பாக இந்தியாவுக்குள் பர்வேஸ் முஷாரப் ஊடுருவினார் என்று பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வி.கே.சிங், இந்த விவகாரத்தில் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு அயல்நாட்டு ராணுவ தளபதியாக இருந்து மற்றொரு நாட்டுக்குள் 11 கிலோ மீட்டர் தொலைவு ஊடுருவி ஒருநாள் இரவு தங்கியிருந்த முஷாரப்பின் செயல் துணிச்சலானது... பாராட்டுக்குரியது. இப்படி ஊடுருவினால் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் அவர் தைரியமாக ஊடுருவியிருக்கிறார்.

இரண்டாவதாக நமது ராணுவம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற உண்மையும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். எப்படி அவர் ஊடுருவ அனுமதிக்கப்பட்டார்? அப்படியானால் நமது தரப்பில் இருந்த தவறுகள் என்ன? அவற்றை சரிசெய்தாக வேண்டும் என்றார்.

இந்திய ராணுவ தளபதியாக 2010-12 காலத்தில் தலைமை தளபதியாக இருந்தவர் வி.கே.சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+