கெஜட்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு - இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்- கர்நாடகா முதல்வர் ஷெட்டர்

Subscribe to Oneindia Tamil

Jagadish Shettar
பெங்களூர்: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை வரும் 20-ந் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் இன்று கர்நாடகா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது.

காவிரி நதிநீர் வழக்கில் முக்கிய திருப்பமாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடகா சட்டசபையில் நேற்று கடுமையான விவாதம் நடைபெற்றது.

சபையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்தார். மேலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து கர்நாடகா எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ரேவண்ணாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிட மற்ற கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் பேசிய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக விவாதிக்க பிப்ரவரி 6ம் தேதி(இன்று) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+