For Daily Alerts
Just In
கைதிகள் இப்படியெல்லாம் கூட இப்ப யோசிக்கிறாங்க...
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில், சோப்புகளில் மொபைல்போன் வைத்து கடத்திய 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தூத்துக்குடியை சேர்ந்த மாரிஸ் மற்றும் கார்த்திக். இவர்கள் பாளை., சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியை பார்க்க வந்திருந்தனர். சம்பந்தப்பட்ட கைதியிடம், 2 சோப்புகளை தரும் போது, சிறை அதிகாரிகள், அந்த
சோப்புகளைப் பறிமுதல் செய்து பரிசோதனை செய்தனர். அப்போது சோப்புக்குள் 2 மொபைல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, அவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சோப்புக்குள் வைத்து செல்போன் கடத்திய சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
2 persons were arrested for smuggling cell phones into Palayamkottai prison.
Story first published: Tuesday, February 5, 2013, 12:42 [IST]