குவைத்தில் மன்னரை விமர்சித்த 3 மாஜி. எம்.பி.க்களுக்கு 3 ஆண்டு சிறை
குவைத்: குவைத் மன்னரை பற்றி விமர்சித்த முன்னாள் எம்.பி.க்கள் மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி மாபெரும் பேரணி நடந்தது. அதில் முன்னாள் எம்.பி.க்கள் பலா அல் சவ்வாக், காலீத் அல் தஹஸ் மற்றும் பதர் அல் தாஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். பல முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற பேரணியில் முன்னாள் எம்.பி.க்கள் குவைத் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபாவுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
மன்னருக்கு எதிராக கோஷமிட்ட மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குவைத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக மன்னரை பற்றி ட்விட்டரில் விமர்சித்த முகமது அல் அஜ்மி என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் மன்னரை விமர்சனம் செய்த 300க்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னரை விமர்சிப்பவர்களை சிறையில் அடைப்பதற்கு சமூக வளைதலங்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications