6வது முறையாக மார்புகளைப் பெருக்கப் போய் உயிரைவிட்ட ஆபாசப் பட நடிகை

Subscribe to Oneindia Tamil

Carolin Wosnitza
பான்: ஜெர்மனியைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஒருவர் ஆறாவது முறையாக மார்பகப் பெருக்க ஆபரேஷன் செய்யப் போய் தற்போது உயிரை விட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்த டாக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயர் கரோலின் வொஸ்னிட்ஸா. இவருக்கு 23 வயதாகிறது. இவர் ஆபாசப் பட நடிகை ஆவார். ஏகப்பட்ட நீலப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே மார்பு பெரிதுதான். இருந்தாலும் மேலும் பெரிதாக்குவதற்காக அவ்வப்போது மார்பகப் பெருக்க ஆபரேஷன் செய்து வந்தார்.மொத்தம் 5 முறை இப்படிச் செய்து பிரமாண்டமானதாக தனது மார்புகளைப் பெருக்கியுள்ளார்.

இந்த நிலையில் 6வது முறையாக மார்பில் கை வைக்கப் போய் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபரேஷனின்போது கரோலினுக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்தே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழக்கக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷனின்போது மயக்க மருந்து கொடுத்த டாக்டரைக் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஹம்பர்க் நகர கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. டாக்டரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. தெரிந்தே ஒரு உயிர் பறிபோக காரணமாக இருந்ததாக டாக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிக் பிரதர் நிகழ்ச்சியின் ஜெர்மநிப் பதிப்பில் கரோலின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+