For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரனை கொல்ல கூலிப்படைக்கு ரூ.5 கோடி: செல்போன் பேச்சால் சதி

By Siva
Google Oneindia Tamil News

Shibu Soren
ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரனைக் கொல்ல கூலிப்படைக்கு ரூ.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோ மாவட்டத்தில் உள்ள காஸ்மர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மிஸ்ரா. அவர் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரனை கொல்ல திட்டமிட்டார். இதையடுத்து அவர் சோட்டு மஹதோ என்பவருக்கு ரூ. 5 கோடி கொடுத்து சிபு சோரனை தீர்த்துக் கட்டுமாறு கூறினார்.

சிபு சோரனை கொல்ல தனக்கு ரூ.5 கோடி கிடைத்துள்ள விஷயத்தை சோட்டு மாவோயிஸ்டான சோனாலால் மஹதோவிடம் போனில் தெரிவித்துள்ளார். சோனாலாலின் செல்போனை ஏற்கனவே போலீசார் கண்காணித்து வந்ததால் சோட்டு கூறியது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரும் பேசியதை போலீசார் பதிவு செய்தனர்.

இதையடுத்து சோரனின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகமில்லாதவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று சிபு சோரன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

English summary
Prakash Misra, a resident of Kasmar village in Bokaro district gave Rs. 5 crore to a contract killer Chotu Mahto to murder Jharkhand former CM and JMM chief Shibu Soren. This plot came to light when Chotu told the plan to an Maoist Sonalal Mahto, whose cell phone was already on police surveillance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X