அப்சல் குரு தூக்கு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் டிவி, எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் தடை
ஸ்ரீநகர்: டெல்லி திகார் சிறையில் அப்சல்குரு தூக்கிலிடப்படும் விசயம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த விஷயம் தெரியாதபடி பார்த்துக் கொண்டார்கள். கேபிள் டி.வி., எஸ்எம்.எஸ்., மற்றும் சமூக வலைத்தளங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சிறிது நேரம் தடை செய்யப்பட்டிருந்தது.
வாய்ப்பு கொடுக்கவில்லை
அப்சல் குருவின் குடும்ப உறுப்பினர்களுக்குகூட இன்று அவர் தூக்கிலடப்படும் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். குருவின் சகோதரர் அஜாஸ் குரு, "அப்சல் தூக்கிலப்படும் முன் அவரை கடைசியாக ஒருதடவை பார்ப்பதற்கு குடும்பத்தினர் விரும்பியிருந்தோம். ஆனால், அந்த வாய்ப்பு தரப்படவில்லை" என்று வருத்தத்துடன் கூறினார்.
கடையடைப்பு
காஷ்மீரின் தோடா, கிஷ்த்வார் பகுதிகளில், இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், இன்று அடைக்கப்பட்டுள்ளன. அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக இவர்கள் கடையடைப்பு செய்துள்ளனர்.
கண்காணிப்பில் காஷ்மீர்
கிஷ்த்வார் பகுதி போலீஸ் துணை கமிஷனர் ஆர்.கே.ஷெவான், தோடா பகுதி போலீஸ் சீனியர் அதிகாரி ஆரிஃப் ரிஷூ ஆகிய இருவரும், "நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
2001 டிசம்பர் 13 ஆம் தேதி உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றம் என்ற அடையாளங்கள் தாங்கிய காரில் 5 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.
இதேநேரத்தில நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. வெடிகுண்டுகளை உடலில் பொருத்திவந்த ஒரு தீவிரவாதியை சுட்டபோது வெடித்துச்சிதறியதால் அங்கு பதற்றம் கூடியது.தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 5 காவல்துறையினர்,.நாடாளுமன்ற காவல்பணியில் ஈடுபட்டவர்களில் ஒரு பாதுகாவலர் மற்றும் ஒரு தோட்டப் பராமரிப்பாளர் ஆகியோர் உயிரிழந்தனர். 18 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர்.கிட்டதட்ட அரைமணிநேரம் இந்த தாக்குதல் சம்பவம் நீடித்தது.
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள் இருந்தபோதும், யாரும் காயமின்றி உயிர்தப்பினர். தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் டெல்லியில் பேருந்து ஒன்றில் இருந்த அப்சல் குரு உடனடியாக கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications