அலகாபாத் ரயில் நிலைய பாலம் இடியவில்லை; கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம்: ரயில்வே அமைச்சர்
Subscribe to Oneindia Tamil

அலகாபாத்தில் மவுனி அமாவாசையான நேற்று சுமார் 3 3 கோடி பேர் புனித நீராடினர். இவர்கள் ஊர் திரும்புவதற்காக ஒரே நேரத்தில் அலகாபாத் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர்.
இதைத் தொடர்ந்து அலகாபாத்துக்கு சென்ற ரயில்வே அமைச்சர் பவன்குமார் அங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே நடைபாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. பக்தர்களை சொந்த ஊருக்கு அனுப்ப 69 சிறப்பு ரயில் இயக்கப்படும். தேவை ஏற்பட்டால் அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications