பாதுகாப்பு காரணங்களால் சோனியாவின் கும்பமேளா பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்: பாதுகாப்பு காரணங்களால் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் கிஷோ வர்ஷினி கூறுகையில், மாநில அரசால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் உள்ளது. இதனால் சோனியாவின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் கும்ப மேளாவிற்கு மத்திய அரசு அளித்த தொகையை சமாஜ்வாடி அரசு முறையாக பயன்படுத்வில்லை என்பதால் ஏற்பட்ட குற்ற உணர்வில் மாநில அரசு சிக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் தமது கும்பமேளா பயணத்தை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications