For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ரயில்களில் திருடிய வடமாநில கொள்ளை கும்பல் சிக்கியது: 100 பவுன் நகைகள் மீட்பு
சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் திருடர்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து ரயில்வே கூடுதல் டிஜிபி சேகர், ஐ.ஜி. ஆறுமுகம் ஆகியோர் மேற்பார்வையில் டிஎஸ்பி தில்லை நடராஜன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் ரயில் கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். பல்வேறு குழுக்களாக பிரிந்து அவர்கள் ரயில் நிலையங்கள், ஓடும் ரயில்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த புல்பீதி சிங் தலைமையிலான 8 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கயது. அவர்களிடம் இருந்து 100 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments
English summary
Chennai railway police nabbed a 8 member gang that stole jewels from passengers in those trains that start from the city to other states. Police confiscated 100 sovereign jewels from them.