திமுகவுக்கு தாவிய கரூர் காங்கிரஸ் கவுன்சிலர்!
கரூர்: கரூரில் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி அதன் கூட்டணி கட்சியான திமுகவில் சேர்ந்துள்ளது பலரது புருவத்தையும் உயரவைத்துள்ளது.
கரூர் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், 34 வார்டுகளில் அதிமுகவும், காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் தலா நான்கு வார்டுகளிலும், மதிமுக மூன்று வார்டுகளிலும், சுயேட்சைகள் இரண்டு வார்டுகளிலும், திமுக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. கரூர் நகராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி திருச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கரூர் நகராட்சி ஏழாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ரவிக்குமார் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் மூலம் கரூர் நகராட்சியில் திமுகவின் பலம் இரண்டாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் திமுகவுக்கு தாவியது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications