பாகிஸ்தானில் அப்சல் குருவுக்கு தீவிரவாதி ஹபீஸ் சையதுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய யாசின் மாலிக்

Subscribe to Oneindia Tamil

Yasin Malik, Hafiz Saeed come together to mourn Afzal Guru's execution
இஸ்லாமாபாத்: நாடாளுமன்றத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக் இஸ்லாமாபாத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

இதில், மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர் ஏ தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீதும் கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஜம்மூ காஷ்மீர் விடுதலை இயக்கத்துக்கும் லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான தொடர்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த உண்ணாவிரதத்தில் பேசிய மாலிக், இந்திய அரசு அப்சல் குருவை தூக்கில் போட்டுவிட்டதால் சரப்ஜித் சிங் விஷயத்தில் பாகிஸ்தான் அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம். சரப்ஜித் சிங்கை தூக்கில் போட வேண்டும் என்று சிலர் கோருகின்றனர். ஆனால், அவரை தூக்கில் போடுவதும் ஒரு கொலை தான். நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருவதால் மத்திய அரசு அப்சல் குருவை அவசரப்பட்டு தூக்கில் போட்டுள்ளது.

பல்வேறு ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் காங்கிரஸ் அதிலிருந்து மக்களை திசை திருப்பவே குருவை தூக்கில் போட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+