ராஜிவ் கொலையாளிகள் தூக்கை நிறைவேற்றாதது ஏன்?: சுஷில்குமார் ஷிண்டே விளக்கம்

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி அப்சல் குருவை அவசரமாக தூக்கிலிட்டதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்சல் குருவின் கருணை மனுவை கடந்த 3-ந் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதனால் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவில் 4-ந் தேதி நான் கையெழுத்திட்டேன். அதைத்தொடர்ந்து, தூக்கில் போடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 7-ந் தேதி இரவு, அப்சல் குருவின் மனைவிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 கடிதம் அனுப்பப்பட்டது. 8-ந்தேதி இரவு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு நானே தகவல் தெரிவித்தேன். 9-ந் தேதி காலை அப்சல் குருவை தூக்கில் போடப் போவதாக உமர் அப்துல்லாவிடம் முதல்முறையாக தெரிவித்தேன். அப்சல் குரு விவகாரம் உணர்வுப்பூர்வமானது என்பதால் பகிரங்கமாக செயல்ப்டவில்லை.
ராஜிவ் கொலையாளிகள்
ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட கைதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் மனுவும் நிலுவையில் உள்ளன. இதனால் மரண தண்டனை கைதிகளை காலவரிசைப்படியெல்லாம் தூக்கிலிட முடியாது.
யாசின் மாலிக்
பாகிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதுடன் ஒரே மேடையில் உண்ணாவிரதம் இருந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.
தெலுங்கானா
தெலுங்கானா பிரச்சினை முடிந்து போன ஒன்றல்ல. இன்னும் விவாதித்து வருகிறோம். அப்படியோ அல்லது இப்படியோ ஏதாவது ஒரு முடிவு எடுப்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications