For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிட் வீச்சுக்குள்ளான காரைக்கால் சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி மரணம்!

By Mathi
Google Oneindia Tamil News

Vinodhini
சென்னை: ஒருதலைக்காதலால் ஆசிட் வீச்சுக்குள்ளான காரைக்கால் சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் ஜெயபாலின் மகள் வினோதினி. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்தவன் கட்டிடத் தொழிலாளி சுரேஷ். கடந்த தீபாவளிக்கு வினோதினி ஊருக்கு சென்ற போது சுரேஸ் ஆசிட் ஊற்றி வினோதியின் முகத்தை சிதைத்து விட்டான். அவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கான்.

இதில் கண் பார்வை பறிபோன நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் கடந்த சில மாதங்களாக வினோதினி சிகிச்சை பெற்று வந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோதினி உயிரிழந்தார்.

English summary
The acid attack victim from Karaikal, J. Vinodhini was died in Chennai Private Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X