சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை -பழ. நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கைது!
சென்னை: இலங்கையில் இனப்படுகொலையை தடுக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையைக் கண்டித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னையில் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழினப் படுகொலையை தடுக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தீக்குளித்த முருகதாசனின் நினைவுநாள் இன்று. இதையொட்டி இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க தவறிய ஐ.நா. சபையைக் கண்டித்தும் இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று காலை பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அனைவரையும் தடுத்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications