மன அழுத்தம் இருந்தா தலையணையால அடிச்சிக்கலாம்… !

உயரதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளானவர்களும், கல்லூரிகளில் பேராசிரியர்களின் நெருக்கடிக்கு ஆளான இளைஞர்களும் இன்றைக்கு கடுமையான மனநெருக்கடிக்கு ஆளாவதாக கூறுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தெருக்களில் கூடி தலையணைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி தங்களின் மன அழுத்தத்தினை தணித்துக் கொள்கின்றனர்.
சீனாவில், சமீபகாலமாக, நடந்து வரும் "பில்லோ பைட்' என அழைக்கப்படும் தலையணைச் சண்டை மூலம் மன அழுத்தம் குறைகிறது என்பது பெரும்பாலான இளைய தலைமுறையினரின் கருத்தாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதியில், ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட நகரங்களில், இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடக்கிறது.
குறிப்பிட்ட, நாளில், இளைஞர்கள் அனைவரும், வீதிக்கு வந்து, தலையணைகளால் ஒருவரை ஒருவர், விளையாட்டாக தாக்கிக் கொள்கின்றனர். தலையணைகளில் இருக்கும் பஞ்சுகள், பிய்ந்து போகும் வரை, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். அப்போது சிரிப்பும், உற்சாகமும் தொற்றிக்கொள்வதால் மன அழுத்தம் பறந்து போகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
ஒருமுறை தலையணைகளால் தாக்கிக் கொள்வதன் எப்படி மன அழுத்தம் சரியாகும் என்று கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் பதில் வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, சண்டைக்கு கொண்டு வரும் தலையணைகளின் மீது, உயரதிகாரிகளின் பெயர் அல்லது ஆசிரியர்களின் பெயரை எழுதி விடுவார்களாம், இதன் மூலம், அவர்களை பழி வாங்கி விட்ட உணர்வு எங்களுக்கு ஏற்படும்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தமும் போய் விடும்...' என பதில் அளிக்கின்றனர் சீன இளைஞர்கள்.
மன அழுத்தம் ஏற்பட்டால் தியானம் செய்யுங்கள்... நல்ல உணவு சாப்பிடுங்கள்... உடற்பயிற்சி செய்யுங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால் சீனாவிலோ தலையணையை கொண்டு சண்டை போட்டு மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வது ஆச்சரியமான விசயம்தான்.












Click it and Unblock the Notifications