பர்கரில் கழுதைக் கறி: இங்கிலாந்தில் ஒரு அக்கப்போர்
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த மாதம் பர்கரில் மாட்டுக்கறிக்கு பதில் குதிரைக்கறி இருந்ததாக பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போது கழுதைக்கறியை வைத்து மோசடியாக விற்பதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
இங்கிலாந்தில் கடந்தமாதம் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்பட்ட மாட்டுக்கறி பர்கரில் குதிரைக்கறி கலந்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 1 கோடி பர்கர்கள் கடைகளில் இருந்து திரும்ப பெறப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கழுதைக்கறியைக் கலந்து பர்கர்கள் விற்கப்படுவதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த மாதம் ருமேனியாவிற்கு அனுப்பப் பர்கரில் குதிரைக்கறி கலந்திருந்தது குறித்து பிரான்ஸ் அமைச்சர் பெனாய்ட் ஹமோன் புகார் கூறியிருந்தார்.
அதேபோல ஐரோப்பிய யூனியன், அதிகாரிகளும் இதேபோன்ற புகாரைக் கூறியிருந்தனர். மேலும் குதிரை வண்டிகளை ருமேனிய அரசு தடை செய்திருப்பதால் குதிரைகளை இறைச்சிக்காக அனுப்பவது அதிகரித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த பின்னணியில் தற்போது கழுதை இறைச்சியுடன் கூடிய பர்கர்கள் விற்கப்படுவதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications