பட்டப்பகலில் பயங்கரம்... ஆந்திராவில் கல்லூரி அதிபர் மனைவி- மகள் குத்திக் கொலை: கொலையாளிகள் பிடிபட்டன
நெல்லூர்: ஆந்திராவில் பட்டப்பகலில் பார்மசி கல்லூரி அதிபர் வீட்டினுள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபர்கள் தாய், மகளை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூரைச் சேர்ந்தவர் தினகர் ரெட்டி. இவர் பார்மசி கல்லூரி நடத்தி வருகிறார். தினகர் ரெட்டி நெல்லூர் அரிநாதபுரத்தில் புதிய வீடு கட்டி மனைவி சகுந்தலா (42), மகள் பார்கவி (22) ஆகியோருன் வசித்து வருகிறார்.
நேற்று தினகர் ரெட்டி கல்லூரிக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் அவரது மனைவி சகுந்தலாவும், மகள் பார்கவியும் தனியாக இருந்தனர். மதியம் 11 மணி அளவில் புதிய வீட்டில் உள் அலங்காரம் செய்த இந்தியாஸ் என்பவர் தனது கூட்டாளி முரளி மனோஜ், வம்சி கிருஷ்ணா ஆகியோருடன் வந்தார்.
வீட்டில் உள் அலங்காரம் செய்ததில் தினகர் ரெட்டி ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று சகுந்தலாவிடம் இந்தியாஸ் கேட்டுள்ளார். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, நீ கணவரிடம் கேட்டுக்கொள் என்று கூறவே, இந்தியாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதுபோல் நடித்து திடீர் என வாசல் கதவை பூட்டினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா சத்தம்போட இந்தியாஸ் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டுள்ளார். நகையை தர மறுக்கவே சகுந்தலாவை கத்தியால் குத்தியுள்ளான்.
தாயின் அலறல் சத்தம் கேட்டு உள்அறையில் படித்துக் கொண்டு இருந்த மகள் பார்கவி ஓடி வந்தாள். அவளையும் 3 பேரும் தாக்கி கத்தியால் குத்தினர். இதில் தாய்-மகள் இருவரும் உயிரிழந்தனர். பின்னர் 3 பேரும் வீட்டில் புகுந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தினகர் ரெட்டி உறவினர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். இதனால் கொலையாளிகள் அதிர்ச்சியடைந்தனர். நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் உறவினர்கள் தினகர் ரெட்டிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த தினகர் ரெட்டி தனது கல்லூரி ஊழியர் பிரவின் என்பவருடன் வீட்டுக்கு வந்தார். வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தபோது உள்ளே மனைவியும், மகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனால் பிரவின் வீட்டு பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் புகுந்தார். அவரை வீட்டினுள் பதுங்கி இருந்த கொள்ளையன் இந்தியாஸ் கத்தியால் குத்தினார். அதற்குள் பொது மக்கள் சுற்றி வளைத்து இந்தியாசை பிடித்தனர்.
அவனது கூட்டாளிகள் படுக்கை அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டனர். கதவை உடைத்து அவர்களையும் பிடித்தனர். கொலையாளிகள் 3 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் நெல்லூரில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications