Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டால் அது கர்நாடகத்திற்கு மரண சாசனம்- தேவெ கெளடா

Subscribe to Oneindia Tamil

Former PM Deve Gowda
பெங்களூர்: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடுவதை கர்நாடகம் தடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் அது கர்நாடகத்திற்கு எழுதப்படும் மரண சாசனமாக மாறி விடும் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா.

தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பாதயாத்திரை நடத்தினார் கெளடா. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால், கர்நாடகத்தை பொருத்தவரை அது மரண சாசனம் ஆகும்.

எனவே, இது விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டாமல் நிதான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பு மத்திய அரசு கர்நாடகத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டும் என்றும், ஒருதலைபட்சமாக தீர்மானத்தை கைக்கொள்ள மத்திய அரசு முன்வரக்கூடாது. இதன் மூலம் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+