நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டால் அது கர்நாடகத்திற்கு மரண சாசனம்- தேவெ கெளடா
Subscribe to Oneindia Tamil

தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பாதயாத்திரை நடத்தினார் கெளடா. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால், கர்நாடகத்தை பொருத்தவரை அது மரண சாசனம் ஆகும்.
எனவே, இது விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டாமல் நிதான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பு மத்திய அரசு கர்நாடகத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டும் என்றும், ஒருதலைபட்சமாக தீர்மானத்தை கைக்கொள்ள மத்திய அரசு முன்வரக்கூடாது. இதன் மூலம் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications