சிறுமியை சகாக்களோடு பலத்காரம் செய்த காதலன் இன்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்
வள்ளியூர்: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று தனது சகாக்களோடு இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான பெயிண்டர் ராஜேஷ் இன்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி கேரளாவுக்கு கடத்தி சென்று கொட்டரக்கரையில் உள்ள ஹோட்டலில் வைத்த பலத்காரம் செய்ததோடு, நண்பர்களுக்கும் விருந்தாக்கினார்.
பின்னர் சிறுமியை காரில் ஏற்றி சென்று கொட்டரக்கரை தேசிய நெடுஞ்சாலையில் வீசி விட்டு தப்பினார். இச்சம்பவத்தில் தொடர்புடையவரை பிடிக்க கொட்டரக்கரை டிஎஸ்பி ஆன்றோ தலைமையில் 3 தனி்ப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் நேற்று முன்தினம் ராஜேஷை கொட்டரக்கரையில் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் பெயிண்டரான ராஜேஷிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட்டார். இந்நிலையில் சிறுமியை வள்ளியூரில் காதலித்து 2 முறை பலத்காரம் செய்துள்ளார். கடந்த டிச 20ம் தேதியும், 21ம் தேதியும் சிறுமியை தனது வீ்ட்டுக்கு வரவழைத்து ராஜேஷ் பலத்கதாரம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் ராஜேஷை நேற்று கொட்டரக்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வள்ளியூர் கோர்டடில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் இன்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்