கேரளா- கர்நாடகா எல்லைப் பகுதியில் காலூன்றும் மாவோயிஸ்டுகள்

Subscribe to Oneindia Tamil

கண்ணூர்: கேரள மாநிலத்தில் கர்நாடகா எல்லையோரத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை உறுதி செய்திருப்பதாக கண்ணூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வனப்பகுதிகளில் அங்கு தீவிர தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கண்ணூர் போலீஸ் எஸ்.பி. ராகுல் நாயர் கூறுகையில், கேரள- கர்நாடகா எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்றார். மேலும் கண்ணூரில் கர்நாடகா எல்லை மற்றும் வயநாடு மாவட்டப் பகுதிகளுக்கும் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து கேரளா- கர்நாடகா இரு மாநில போலீசாரும் இணைந்து எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவல்களின்படியே மாவோயிஸ்டுகளின் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+