அப்பாடா... தமிழக எல்லையைத் தொட்டுவிட்டது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்!

தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கர்நாடகாவோ கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் இந்த நீரை திறந்துவிட்டது.
வழக்கமாக கர்நாடகாவில் நீர் திறந்துவிடப்பட்டால் 48 மணி நேரத்தில் தமிழக எல்லையை வந்தடையும். ஆனால் இம்முறையோ கடந்த 5 நாட்களாக தமிழக எல்லையைக் கூட எட்டிப் பார்க்கவில்லை காவிரி நீர். இதனால் காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டதா? என்ற சந்தேகமும் எழுந்தது. இதைத் தொடர்ந்து குறைந்த நீரை திறந்துவிட்டதால் கர்நாடகா மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு காவிரி நீர் பிலிகுண்டுவை வந்தடைந்தது. வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காவிரியில் தமிழகத்துக்கு தொடர்ந்தும் நீரை திறந்துவிட முடியாது என்பதை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வரும் 18-ந் தேதி கர்நாடகாவின் அனைத்துக் கட்சிக் குழு நேரில் வலியுறுத்தும் என்று அம்மாநில சட்டசபையில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications