நெல்லையில் பயங்கரம் - கொள்ளை முயற்சியில் பெண் கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் கொள்ளை முயற்சியின்போது ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகேயுள்ள திருநகரை சேர்நதவர் பிரைட் சிங். இவர் அரசு சுகாதார துறையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிகிறார். இவரது மனைவி அமுதாபாய். கங்கை கொண்டான் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களின் மகன் மதுரையிலுள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். அமுதாபாயின் தாயார் ராஜம்மாள் இவர்களோடு குடியிருந்து வந்தார்.

பிரைட்சிங் இப்போது குடியிருக்கும் தெருவிலேயே ஒரு வீடி கட்டி வந்தார். கணவன் மனைவி இருவரும் தினமும் வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு தான் விடு திரும்புவர். அதுவரை ராஜம்மாள் தனியாக வீட்டில் இருப்பார். நேற்று வழக்கம் போல் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

மாலையில் இருவரும் வீடு திரும்பிய போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ராஜம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

பிரைட்சிங் அலறிய சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். துணை கமிஷனர் ராஜராஜன், கூடுதல் துணை கமிஷனர் கோயார், உதவி கமிஷனர் ராஜமன்னார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜம்மாள் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்றும் நகைகள் இருக்கும் பீரோ சாவியை அவர் கொடுக்க மறுத்ததால் கொலை செய்து விட்டு தப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+