வேலூரில் வேன் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி. மாணவி பலி

Subscribe to Oneindia Tamil

பள்ளி கொண்டா: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி சிறுமி உயிரிழந்தார்.

தனியார் பள்ளியில் படித்து வந்த தர்ஷிணி, நேற்று மாலை பள்ளி வேனில் வீட்டிற்கு திரும்பும்போது பசுமாத்தூர் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது, ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால் தடுமாறி கீழே விழுந்த சிறுமி தர்ஷிணி, வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பள்ளி வாகனத்தின் ஓட்டுனர், நடந்த சம்பவத்தை எவருக்கும் தெரிவிக்காமல், 15 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், அப்பகுதிக்கு காவல்துறையினரும், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த யாரும் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தொடரும் மரணங்கள்

தாம்பரம் பள்ளி மாணவி ஸ்ருதி மரணத்தைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+