For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் வாலிபரை கொன்று தண்டவாளம் அருகே உடல் வீச்சு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியை அடுத்து உள்ள கரம்பை ரயில் தண்டவாளம் அருகே இன்று காலை சிகப்பு கலர் டி-சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை செங்கோட்டையில் இருந்து நெல்லை செல்லும் ரயில் என்ஜின் டிரைவர் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்த உடன் கல்லிடைகுறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை கொலை செய்து ரயில் தண்டவாளம் அருகே கொண்டுவந்து போட்டு ரயிலில் அடிபட்டு இறந்தது போல் ஜோடிக்க திட்டமிட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Unidentified persons killed a youth and dumped his body near a railway track in Tirunelveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X