உக்ரைனில் கால்பந்தாட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் சென்ற விமானம் தரையில் மோதி விபத்து: 5 பேர் பலி
கீவ்: உக்ரைனில் கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் சென்ற விமானம் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
உக்ரனைனின் ஒடேஸாவில் இருந்து 44 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் சதர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏஎன்-24 என்ற விமானம் நேற்று டோனெட்ஸ்க் நகருக்கு கிளம்பியது. அந்த விமானம் தரையிறங்குகையில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்றது. இதில் விமானம் தலை கீழாக பிரண்டதில் 5 பேர் பலியாகினர்.
உடனே விமானத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. பயணிகளில் பெரும்பாலானோர் டோனெட்ஸ்கில் நடக்கும் யுஇஎஃப்ஏ சாம்பியன் லீக் போட்டிகளில் ஷக்தர் டோனெட்ஸ்க் மற்றும் பொரஸ்யா டார்ட்மன்ட் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காணச் சென்றவர்கள்.












Click it and Unblock the Notifications