For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிபுரா சட்டசபை தேர்தல்: 93% வாக்குகள் பதிவாகி சாதனை!

By Mathi
Google Oneindia Tamil News

Tripura assembly election
அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் சாதனையாக 93% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 249 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திரிபுராவில் 20 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் இடது முன்னணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.

வாக்குப் பதிவுக்காக 3 ஆயிரத்து 41 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 18 ஆயிரம் ஊழியர்கள் வாக்குப்பதிவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகின. பிற்பகலிலேயே 40% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது.

23.5 லட்சம் வாக்காளர்களில் 93% பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

இந்த வாக்குகள் 28-ம்தேதி எண்ணப்படுகின்றன. 2008-ல் நடந்த தேர்தலில் 92% வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

English summary
Tripura on Thursday set a new record for the country's highest-ever voter turnout with 93 percent polling in the Assembly elections which was by and large peaceful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X