For Daily Alerts
Just In
டிவி பார்ப்பதில் தம்பியுடன் சண்டை.. திட்டினார் அப்பா.. பிளஸ் டூ மாணவி தற்கொலை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், டிவி பார்க்கும்போது தம்பியுடன் சண்டை போட்டதால் அப்பா கண்டித்துள்ளார். இதனால் மன வருத்தமடைந்த பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
மானாமதுரை குண்டுராயர் தெருவில் வசிப்பவர் சிங்கப்பெருமாள். இவர் கூட்டுறவு நிறுவனமான பாம்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் பத்மா (17). பிளஸ் டூ படித்து வந்தார்.
சம்பவத்தன்றஉ வீட்டில் டி.வி பார்ப்பதில் பத்மாவுக்கும் அவரது தம்பிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தை சிங்கப்பெருமாள் இவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பத்மா வீட்டுக்குள் தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Comments
English summary
A +2 girl committed suicide as her father chided her not to fight with her brother in Manamadurai.
Story first published: Friday, February 15, 2013, 17:58 [IST]