For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடிந்தகரையில் பரபரப்பு... பிரெஞ்சு தேசியக் கொடியை எரித்து அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம்

Google Oneindia Tamil News

Anti-nuclear protesters burn French national flag
நெல்லை: நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் போராட்டம் நடத்திய அணு உலை எதிர்ப்பாளர்கள், பிரெஞ்சு தேசியக் கொடியை தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டே இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெரும் திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரையில் திரண்டு முதலில் பேரணி நடத்தினர். கூடங்குளம் அணு உலையை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் இந்தப் போராட்டம் நடந்தது. பேரணியின் நிறைவில் பிரெஞ்சு தேசியக் கொடி தீவைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் ஜைதாப்ப்பூரில் அணு மின் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும், பிரான்ஸும் கையெழுத்திடவுள்ளன. இதற்காகவே ஹோலன்டே வருகிறார். இதைக் கண்டித்தே தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் அதிபரான பின்னர் முதல் முறையாக ஹோலன்டே இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்ககது. 2 நாட்கள் அவர் இந்தியாவில் தங்கியிருப்பார்.

English summary
Anti-nuclear protesters in Idinthakarai burnt the French national flag on Thursday condemning the visit of France's president Francois Hollande to India. A large number of men and women, who are staging a prolonged protest against the nuclear plant at Kudankulam, took out a march from Idinthakarai village in Tirunelveli district and burnt the French national flag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X