சென்னை கொருக்குப்பேட்டையில் அ.தி.மு.க வட்டச் செயலர் வெட்டிக் கொலை:
சென்னை: சென்னையில் அதிமுக நிர்வாகி ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பாஸ்கரன், கொருக்குப்பேட்டை பகுதியின் வட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பாரதி நகரில் உள்ள அலுவலகத்தில் நேற்றிரவு அவர் இருந்தபோது, திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து, வெட்டியது. இதில் பலத்தக் காயமடைந்த பாஸ்கரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன் விரோதம் காரணமா?
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், பாஸ்கரன் தலையிட்டதன்பேரில், ஒரு பிரிவைச் சேர்ந்த சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொருக்குப் பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன், ரஜினி ஆகியோர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து அவர்களை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications