சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுவோர் லஞ்சம் கொடுப்பது தப்பே இல்லை: இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி

இத்தாலியிடமிருந்து இந்தியா ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழல் வெளியாகி பல தலைகள் உருண்டு கொண்டிருக்கின்றன. இத்தாலிய ஃபின்மெக்கானிகா மற்றும் அகஸ்டா வெஸ்டா நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவில் தற்போது முன்னாள் ராணுவ தளபதி தியாகியின் பெயர்தான் அடிபடுகிறது. அரசியல் தலைவர்கள் எவரது பெயரும் உருளவில்லை.
இந்நிலையில் பாலியல் சர்ச்சைகளில் அடிக்கடி அடிபடுகிற இத்தாலிய முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி, இந்திய நாட்டு விதிகளின்படி லஞ்சம் கொடுப்பது, பெறுவது தவறு. ஆனால் சர்வதேச வர்த்தகங்களில் ஈடுபடும் நிறுவனங்களால் இப்படி லஞ்சம் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்று.
இத்தாலிய அரசு இப்படியான ஒப்பந்தங்களைப் பற்றி விசாரிப்பது என்பது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். ஃபின்மெக்கானிக்காவின் தலைமை அதிகாரியை கைது செய்ததன் மூலம் இத்தாலி நாட்டின் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப் போகிறது என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications