விமான பணிப்பெண் கீத்திகாவின் தாயும் தற்கொலை! மகளைப் போல, அதே பாணி!!
டெல்லி: முன்னாள் விமான பணிப் பெண் கீத்திகா சர்மாவின் தாயும் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டா நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் விமானப் பணிப் பெண் கீத்திகா சர்மா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
அமைச்சர் கோபால் கண்டா மற்றும் அவரது உதவியாளர் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக 22 வயதான கீத்திகா சர்மா ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீத்திகா சர்மாவை, கோபால் கண்டா பிளாக் மெயில் செய்ததாக, கீத்திகாவின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் முதலில் தலைமறைவாக இருந்து பின்னர் போலீஸில் சரணடைந்த கோபால் கண்டா தற்போது சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் கீத்திகா சர்மாவின் தாய் அனுராதா மேற்கு டில்லியில் உள்ள தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். கீத்திகா தற்கொலை செய்து 7 மாதம் கழித்து அதே வீட்டில், அதே அறையில், அதே மாதிரி, அவரது தாய் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்!
மகளைப் போலவே தமது தற்கொலைக்கு காரணம் கோபால் காண்டாதான் என்று எழுதி வைத்துவிட்டே அனுராதா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications