கோவையில் 13 வயது சிறுமி கற்பழிப்பு: 5 பேர் கைது
கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
9ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, ராமநாதபுரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். அங்கு, கடந்த ஓராண்டாக அந்த மாணவியின் 59 வயதான உறவினரும் , அவருடைய நண்பரான கருப்பசாமியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்களுடைய 70வயது நண்பரான, ஓய்வுபெற்ற மருத்துவ உதவியாளர் பாலுவிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவருடன், ராகம் கருப்பசாமி ஆகியோர் சிறுமிக்கு தொடர்ந்து வன்கொடுமை இழைத்துள்ளனர்.
அதனால், பாதிப்படைந்த சிறுமி நேற்று கோவை மாநகராட்சி காவல் துறை ஆணையரிடம் புகாரளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் காவலர்கள் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து அளித்தும் அவர்கள் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது












Click it and Unblock the Notifications